Saturday, June 23, 2012

வாழ்க்கை

நாம் மிகவும் வேகமாகவும், தீர்க்கமாகவும் போய்க்கொண்டிருக்கிறோம். அனால், பாதை சரியானதுதானா?

தொலைபேசியை கண்டுபிடிக்கும் முன் அதன் இன்றைய பிரம்மாண்ட வளர்ச்சியை யாரும் கணித்திருக்க மாட்டார்கள். இருந்தாலும் தொலைத்தொடர்புத் துறை இந்த அளவு இந்தியாவில் வளர்த்திருக்க வேண்டாம். தொலைபேசி வர்த்தகம் உலகளவில் 2 % குறைந்த போதும் இந்தியாவில் அது 6 % வளர்ந்துள்ளது. இந்திய தொலைத்தொடர்புத் துறையில் நடந்த ஊழல் உலகையே மிரள வைத்தது என்றால் அது மிகையாகாது.

பள்ளியிலேயே மொபைல் மூலம் தவறாக வீடியோ எடுத்த செய்தியும் நாம் அறிந்ததே. இச்சாதனங்கள் எல்லாம் கண்டுபிடிக்கும் முன்னர் படிப்பு என்பது தரமானதாகவும், எளிதாகவும், வலிமையாகவும் இருந்ததை யாரும் மறுக்க முடியாது. இன்று அனேக மாணவர்கள் பள்ளியிலேயே மொபைல் ஆகிறார்கள். இல்லாத சிலர் பெரும் விரக்தியில் வாழ்வின் ஓரத்திற்கு சென்றுவிடுகிறார்கள், சிலர் மனவலிமையுடன் தங்களுக்கான நேரம் வரும் வரை காத்திருக்கிறார்கள். மொபைல் இவர்களிடத்தில் நோபலுக்கான இடத்தை எப்படியோ பெற்றுவிட்டது

இன்று மொபைல் போன் மூலம் பரிமாறப்படும் தகவல்களில் அதிகமானது, தவறானது என்பதும், இதற்காக நாம் செலவழிக்கும் நேரமும், பணமும் நம் வாழ்கையை பின்னுக்கு இழுப்பதும் பலரால் அறிந்த, சிலரால் அறியாத உண்மை. மாணவ பருவத்தில் நிகழும் அநேக தவறுக்கு மொபைலும் ஒரு காரணம்.

சிறு சிறு தவறுகளை பெரிதாக்குவதால் எந்த பலனும் இல்லை. ஆம் அனால் இந்த சிறிது என்பது அளவால் அமைவது இல்லை ATTITUDE-ஆல் அமைவது.

1. கிண்டல் - ராகிங் - ஈவ் டீசிங்
2. பணம் - வரதட்சனை கொடுமை - உயிருடன் எரிப்பு
3. Power bike - Super hero - வாகன விபத்து - உயிரிழப்பு
4. காதல் - காமம் - கற்பழிப்பு - கொலை
5. Adjustment - அன்பளிப்பு - லஞ்சம் - ஊழல் - சுவிஸ் வங்கியில் கோடிகள் 

மேலே குறிப்பிட்ட எதுவும் மிகைபடுத்தபட்டது அல்ல. நாம் தினமும் செய்திதாள்களில் படிப்பதே ஆகும். நாம் சம்மந்தப் படாதவரை அவை நமக்கு வெறும் செய்திகளாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது. மேலே கூறப்பட்ட செய்திகள் கீழே உள்ள நிகழ்வுகளாக, அதுவும், நமக்கு நடக்கும் போதுதான் நாம் அதன் சுயரூபத்தை உணர்கிறோம்.

1. கல்லூரிக்கு சென்று முதல் மாத முடிவில் ஒருநாள், ஆசையாய் கேட்ட Contact Lens - வாங்கி வைத்து, வருகைக்காக வாசலை நீங்கள் பார்க்கும் நேரம், மகன்/மகள் கல்லூரியில் அசம்பாவிதமாக இறந்து விட்டதாக செய்தி வந்தால்,
2. திருமணமான 8 ஆம் நாள் புகுந்த வீட்டின் சமயலறையில் மகள் கரிக்கட்டையாக கிடப்பதை பார்க்கும் போது,
3. விளையாட சென்ற பிள்ளையை தேடி, ICU - ல் கண்டெடுக்கும் போது,
4. காதல் வற்புறுத்துதலால், முகத்தை ACID - க்கு பலிகொடுக்கு போது,
5. திருவிழாவில் பிள்ளை தொலைந்து, பசிக்கொடுமையால் பிச்சை எடுக்கும் போது,

தவறு செய்பவர்களை கண்டிக்கும், தண்டிக்கும் எண்ணம் நாம் நேரடியாக பாதிக்கப்போது தான் நமக்கு வருகின்றது. அனால் இந்த தவறுகளுக்கு, நம்முடைய இந்த ATTITUDE-ம் ஒரு காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது. சாவும், துக்கமும் அனைவருக்கும் பொதுவானதுதான், அனால் ஒருவரின் சுவிஸ் வங்கி கணக்கை உயர்த்த 1000 பேரை பட்டினிக்கு பலியிடுவது......?

மாற்றப்படவேண்டியது தனிமனித எண்ணங்களும் அதனால் விழைந்த பழக்கங்களும். இதுவே சமுதாய சிந்தனை மற்றும் செயல்பாடுகளை தீர்மானிக்கின்றது....

நாம் அன்றாட வாழ்கையில் நிகழும் பல நிகழ்வுகள் கேள்விக்குரியதாய் ஆகிவிட்டது. பின்வரும் சிலவற்றிக்கு நாம் தற்போது கொடுக்கும் இடமானது சரியானதுதானா?

1. CELL PHONE - அவசர மற்றும் அத்யாவசியத்திற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கருவி தற்போது முதலிடம் பிடித்துள்ளது நம் பட்டியலில்.
a) CELL PHONE இல்லாமல் இருத்தல்
b) அவசியமான தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும் பயன்படுத்துதல்
c) தேவையான அளவு தகவல் மற்றும் பொழுது போக்கிற்காக பயன்படுத்துதல்
d) எப்பொழுதும் பயன்படுத்துதல் (என் நண்பர் ஒருவர் Toilet - போவதற்கு Alarm வைத்துகொள்கிறார் mobile -ல்)
e) Mobile Network - யே அலறடிக்கும் அளவிற்கு பயன்படுத்து.

2. T.V - அனைத்து வீடுகளிலும் உள்ள செல்லமான IDIOT BOX
a) நாளொன்றுக்கு 1 மணி நேரம் அதற்கும் கீழ்
b) நாளொன்றுக்கு 3 மணி நேரம்
c) நாளொன்றுக்கு 6 மணி நேரம்
d) நாளொன்றுக்கு 10 மணி நேரம் அதற்கும் மேல்

3. COMPUTER - பொதுவாக தொழில்/கல்வி சார்ந்த உபயோகத்தில் இதை நாம் எடுத்துக் கொள்ளலாம்
a) அனைத்திற்கும் Comp உதவியை நாடுவது, மேலும் அதன் அடிப்படையை தெரிந்து கொள்ளாதது
b) வேண்டிய வேலைகளுக்கு மட்டும் பயன்படுத்துவது, அதன் நுட்பங்களை அறிய முற்படுவது
c) Comp செய்யும் அனைத்தையும் செய்ய முயன்று தோற்பது/எப்போதாவது வெல்வது

4. SHOPPING - எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் நாள் முழுக்க MALL -லிலேயே கழிக்க விரும்புபவர், அவர் தனது சொந்த வீட்டை விட்டு MALL -லுக்கு அருகில் வாடகைக்கு சென்றுவிட்டார்
a) எப்பொழுதும் "OUTING"-ல் இருக்கணும்
b) அடிக்கடி ஷாப்பிங் போகணும்.
c) எப்போதாவது போகணும்
d) போகவே கூடாது

5. MONEY - பணம் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை அனால்
a) SWISS BANK -ல் ACCOUNT [இதை எப்படி நான் தமிழ்ல எழுதுவேன்]
b) அம்மா, அப்பாவிடம் "இந்தமாசம் ரொம்ப பணக்கஷ்டம் அடுத்த மாசம் பணம் தர்ரேன்" என்ற நிலையில் சொந்தமாக ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டுதல்.
c) சரியாக சாப்பிடாமல் பணத்தை சேமிப்பது.
d) சேமிக்க முயலாதது
e) டாஸ்மாக் ல் Account வைப்பது

காதல், விளையாட்டு, நாகரீகம், மற்றும் பல அடுத்த பதிவில்.

மேற்கூறியவற்றில் நான் 1-c ), 2-a), 3-a), 4-d), 5-c)-ல் இருக்கிறேன். 1-b), 2-b), 3-b), 4-c), 5-d) -ல் இருக்க விரும்புகிறேன். உங்கள் விருப்பத்தை Comment-ல் இடவும். நம்முடைய இந்த செயல்களுக்கு தக்கவாறு பலன் கிடைப்பது நிதர்சனம். இருப்பினும் நம்மால் சில சமயம் நம் செயல்களை மாற்றிக்கொள்ள முடிவதில்லை.

நாம் வாழ்வின் வெற்றி தோல்விகளை தீர்மானிப்பது நம் முன் உள்ள வாய்ப்புகளுக்கு நாம் தரும் வேறுபட்ட முக்கியத்துவமே ஆகும். உதாரணமாக அதிகமாக Cricket பார்பவர்கள் சச்சின் அல்லது Play ground Watch man ஆகலாம், அதிகமாக Cinema பார்பவர்கள் ரஜினி அல்லது Cinema Theatre சீட்டு கிழிப்பவராக ஆகலாம். அதிகமாக Cell Phone நோண்டுபவர்கள் Steave Jobs அல்லது Cell Phone கடை எடுபுடி ஆகலாம். அதிகமாக படிப்பவர்கள் Engineer அல்லது பைத்தியம் ஆகலாம். படிக்காமல் பீடி வலி(குடி)த்தவர்கள் மந்திரி அல்லது பிச்சைக்காரன் ஆகலாம். அகவே நம் செயல்கள் நிச்சயம் நம் பாதையை தீர்மானிக்கிறது. கடவுள் தன் கையில் வைத்திருப்பது, நாம் சென்றடைவது Upper Limit-கா? Lower Limit-கா? எனும் முடிவு மட்டும்தான். தவறான பாதையில் செல்பவரும் சரியான பாதையில் செல்பவரும் Upper Limit- நோக்கியே செல்கின்றனர். அனால் சரியான பாதையில் செல்பவருக்கு பெரும்பாலும் முடிவு சரியாக அமைகிறது சில விதிவிலக்குகள் தவிர. ஆம் வாழ்க்கை STATISTIC – பின்பற்றுகின்றது. விதிவிலக்குகள் STANDARD DEVIATION – ஆக அமைகின்றது.

புவன் - யுவனுக்காக
முனுசாமி

(அடுத்து: வாழ்க்கை #2 \ 29-06-2012)
தங்களின் கருத்துக்களை Comments-ல் இடவும். (கேள்விகள் வரவேற்கப்படுகின்றன)

3 comments:

  1. நான் 1-B ), 2-NIL), 3-A), 4-C), 5-D)-ல் இருக்கிறேன். 1-B), 2-NIL), 3-b), 4-c), 5-D) -ல் இருக்க விரும்புகிறேன்.

    ReplyDelete
  2. miha arumai thiru.munusamy. nithanamaga vazhkayai munneduthu sendral pizhaithom

    ReplyDelete