Thursday, August 9, 2012

தலைப்பை தேடி.....#1


கொடுமையில் கொடுமை ENGINEER-ஆக இருப்பது
அதனினும் கொடுமை CIVIL ENGINEER-ஆக இருப்பது
அதனினும் கொடுமை படித்ததை அரைகுறையாக ஞாபகம் வைத்திருப்பது

கோயம்பத்தூர் சென்னை VOLVO A/C  பேருந்து - SEMI-SLEEPER - ON-LINE மூலம் பதிவு செய்யப்பட்ட பயணசீட்டை, பேருந்தில் அமர அனுமதிக்கும் போதுதான் முழுமையாக நம்பமுடிகிறது, ஏனென்று தெரியவில்லை - அனைத்து சாலைவிபத்து நிகழ்வுகளும் மனத்திரையில் வேகமாய் ஓடியதை என்னால் தடுத்து நிறுத்த முடியவில்லை – வேறு வழியில்லாமல் நானும் சாமி கும்பிட்டேன் - பேருந்து எடுக்கும் வரை என் சீட்டுக்கு வேறுயாரும் சண்டைக்கு வராதது, கடவுள் எனக்கு அளித்த முதல் வரமாய் நம்பினேன் – இரண்டு சீட்டு தள்ளி இதே சண்டை நடந்ததை என் மனம் ரசித்தது ஏன் என்று தெரியவில்லை – வண்டியின் உயரமான இடத்தில் நாம் அமர்வது நல்லதா? - ஒரு வழியாக வண்டி கிளம்பியது

நகர்புறத்தை தாண்டி பேருந்து வேகமெடுத்தது - வேகமாக வேறொரு வண்டியை CUT அடித்தார் ஓட்டுநர், CUT என்பது வேகமாக வளைத்து மற்றொரு வண்டியை தவிர்ப்பது (பெரும்பாலும் விபத்துகள் இந்த சமயத்தில்தான் நிகழ்கின்றது) - என்னுள் அதுவரை உறங்கிய(?) ENGINEER விழித்ததை நான் சற்றும் விரும்பவில்லை – வண்டியின் வேகம் தோராயமாக மணிக்கு 60 – 80 km – கட் அடிக்கும் போது வண்டியின் இயக்கம் SIMPLE HORMONIC MOTION (SHM) ஆக இருக்கும், மேலும் இதனால் வண்டியின் மேல் மைய விலக்கு விசை (CENTRIFUGAL FORCE) செயல்படும் – இது வண்டியின் வேகம் மற்றும் திரும்பும் ஆரம் (RADIUS) இவற்றை பொறுத்து அமையும் – வண்டியில் உயரமான இடத்தில் நாம் அமர்வதால் வண்டியின் CENTRE OF GRAVITY புள்ளி உயர்கிறது – மிக வேகமாக கட் அடிக்கும் போது மைய விலக்கு விசை உயர்கின்றது – வண்டியின் பாரம் மற்றும் மைய விலக்கு விசை ஆகியவற்றின் RESULTANT வண்டியின் நான்கு சக்கரங்களுக்கு மத்தியில் விழும்போது வண்டி பாதுகாப்போடு செல்கிறது - மைய விலக்கு விசை உயர உயர RESULTANT வண்டியின் நான்கு சக்கரங்களிருந்து விலகி விழும் இது நமக்கு மறுநாள் தினத்தந்தியில் இடம் ஒதுக்க வழி செய்கிறது – விலையுயர்ந்த SUV வண்டிகளில் சக்கரங்கள் வெளிப்புறம் தள்ளியிருக்க இந்த STABILITY CRITERIA தான் காரணம் 

ஒருவழியாக அடுத்த சில மணி நேரத்தில் வண்டியின் பாதுகாப்பு குறித்த என் கணக்கீடுகள், குழப்பத்தின் உச்சத்தை அடைந்து, முடிவு எட்டப்படாமலே முடிந்தது – அரைகுறை துக்கத்துடன் சென்னை என்னை வரவேற்றது – அனைவரும் பாதுகாப்பாக வந்து சேர்ந்ததற்கு சாமி கும்பிட, நானும் கும்பிட்டேன் இனிமேல் பயணம் செய்யும் போது என் குறைபட்ட அறிவை அழித்திட வேண்டும் என்று.

கொடுமையில் கொடுமை ENGINEER-ஆக இருப்பது
அதனினும் கொடுமை CIVIL ENGINEER-ஆக இருப்பது
அதனினும் கொடுமை படித்ததை அரைகுறையாக ஞாபகம் வைத்திருப்பது
.....................................................................*
இந்தியாவில் தற்போதுள்ள கல்விமுறையில் நாம் மாணவர்களுக்கு அதிக அளவிலான தகவல்களை கற்பிற்கின்றோம் அனால் சுவாமி விவேகானந்தா கூறியது போல் வெறும் தகவல்களை சேகரிப்பது கல்வியன்று. உதாரணமாக நியுட்டனின் மூன்று இயக்கவியல் விதிகளும் நம் மாணவர்களில் அநேக பேர்க்கு தெரிந்திருக்கலாம் அனால் அதன் அர்த்தம் தெரிந்தவர்கள் மிக மிக சிலரே. இந்த விதிகளின் முக்கியத்துவம் உயர் படிப்பு மேற்கொள்பவர்களுக்கு மட்டும் தெரிவது நம் கல்வி முறையின் தோல்வியே. மாணவர்களிடையே நியுட்டன் மற்றும் திருவள்ளுவர் முறையே 2 மற்றும் 5 மதிப்பெண் அளவே தகுதி பெற்றிருப்பது நாம் வளராததற்கு மிக முக்கிய காரணம் என கருதுகிறேன். 


என்னுடன் பணியாற்றும் இத்தாலிய நண்பருடன் உரையாடும் பொழுது, அவர்களது நாட்டில் பொறியியல் பட்டம் பெறுவது மிகவும் கடினம் என்றும் சிலருக்கு பட்டம் பெற முதல் 10 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்ளும் எனவும் கூறினார். அந்நாட்டில் ஆண்டுகள் பணிபுரிந்த ஒருவர் இங்கு 10 ஆண்டுகள் பணிபுரியும் ஒருவருக்கு உயரதிகாரியாய் இருப்பது அவர்களது மற்றும் நமது கல்விமுறையின் நிலைமையை தெளிவாக உணர்த்துகிறது. அளவுக்கு அதிகமான சுமையை குழந்தைகள் மீது சுமத்தி, எதுவும் புரியாமல் அதிகமாக கற்பிற்கப்படுவதை விட, குறைவாகவும், தீர்க்கமாகவும் கற்பிற்கப்படுவதே சிறந்தது. இதற்கு முறையான அரசின் திட்டமும், பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளும், ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சியும் தேவை. அதன்பின் மாணவர்களின் அறிவை சோதிக்கலாம்.


புவன் - யுவனுக்காக
முனுசாமி

Monday, July 30, 2012

வாழ்க்கை #2

கதிரேசன் காலையிலிருந்தே மிகவும் பரபரப்புடன் இருந்தான். மகளின் திருமணத்திற்காகத்தான் இந்த பரபரப்பு என அனைவரும் நினைத்தனர். அரசு பணியில் கடந்த 27 வருடத்தில் அவ்வப்போது பணம் வாங்கியிருந்தாலும் அந்த தொகை மற்றும் அதற்கான விதிமீறல்கள் இதனோடு ஒப்பிடும்போது மிகவும் சிறியது. நேற்று அலுவலக மேலாளர் கூறியது மனதிற்குள் ஓடியது கதிர் அமௌன்ட்-ஐ பொருளா வாங்கிக்குங்க, பேப்பர் கையெழுத்து ஆகறதுக்கு முன்னாலயே வாங்கிக்குங்க, பதட்டத்தையும், பயத்தையும் வெளிய காட்டாம நடந்துக்குங்க, அவ்ளோதான். ஒருநிமிடம் மனதை பெருமூச்சுடன் சரிசெய்துகொண்டு, தனது இரு சக்கர வாகனத்தை கிளப்பும்போது அப்பா நான் மண்டபத்துக்கு போய் ARRANGEMENT  CHECK பண்ணிட்டு அப்படியே BANK போயிட்டு வர்றேன், “சரி 10 நாள்ல கல்யாணத்தை வெச்சுகிட்டு ரொம்ப அலையாத, பார்த்து போ என்று மகளிடம் சொல்லிவிட்டு, கையில் வைத்திருந்த பையை ஒருமுறை திறந்து பார்த்து உறுதி செய்து கொண்டு, வண்டியை வேகமாய் செலுத்தினார்.

வண்டியை ஒரு உயரமான கட்டிடத்தின் ஓரமாக நிறுத்திவிட்டு, அந்த கட்டிடத்தின் பெயரை தலையை நிமிர்த்தி படித்தார்  “நா....ரா..............ன்மூன்றாம் மாடியில் ஒரு நுழைவாயிலை அடைந்து அதை தட்டினான். “Yes Sir“, “Mr.ராகவன்? ஒரு நிமிஷம் Sir” உள்ளே சென்று சில நிமிடத்தில் வெளியே வந்து Sir உங்களை கூப்பிடறார்


இங்க பாருங்க கதிரேசன் நீங்க பயப்படற அளவுக்கு எந்த பிரச்சனையும் இதில இல்லை, TIME பத்தாததால ஒரு வாரம் முன்னாலேயே CENTERING SUPPORT- REMOVE பண்றோம், அவ்வளவுதான், இதனால ஒன்னும் ஆயிடாது, நீங்க எல்லாம் முறைப்படி நடந்ததா ஒரு CERTIFICATE கொடுத்தாத்தான் எங்களுக்கு BILL - PASS ஆகும், அதனாலதான் உங்களை ஏற்பாடுபண்ண சொல்லவேண்டியதா போச்சு, கதிரேசன் தன்னுடைய பையில் இருந்த FILE-ஐ எடுத்து அதிலிருந்து சில பேப்பர்களை அவரிடம் கொடுத்தான், “உங்களை நம்பித்தான் இதை செய்யறேன், நீங்கதான் ஏதும் பிரச்சனை வராம பார்த்துக்கணும் ராகவன் அந்த தகவல்களை சரிபார்த்துக்கொண்டு, தன்னிடம் இருந்த ஒரு கவரை அவனிடம் தந்தார். நாங்க இந்தமாரி நெறைய பண்ணிருக்கோம், இதுல நீங்க கேட்ட LAND DOCUMENT இருக்கு சரிபார்த்துக்குங்க என்றார்.


பதட்டம் குறைந்த நிலையில், தனது வண்டியை எடுத்தான், தனது பையில் இருந்த DOCUMENT-ஐ ஒருமுறை சரிபார்த்துக்கொண்டார். தான் விரும்பியபடி, தனது மகளுக்கு ஒரு உயர்ந்த இடத்தில் திருமணம் நடப்பதற்காக, அவர்களுக்கு அதிகமாக வரதட்சணை தரவேண்டி வந்ததும், அதற்காக இந்த LAND-ஐ லஞ்சமாக கேட்டுப் பெற்றதும் மனதுள் ஓடியது. எனினும் வேலை முடிந்ததால், உள்ளுர மகிழ்ந்தான். போன் அழைத்தது, எடுத்து பேசினான் மறுமுனையில் என்னங்க நம்ம பொண்ணுக்கு கல்யாண மண்டபத்துல அடி பட்டிருச்சு, அவளை மண்டபத்துக்கு எதிருல இருக்குற ஆஸ்பத்திரில சேத்துருக்காங்கலாம் நான் அங்கேதான் போயிட்டிருக்கேன், நீங்களும் வந்துருங்க அழுகையுடன் சொல்லி, பதிலுக்காக காத்திராமல் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

கதிரேசன் உடல் வியர்க்க, கை கால் நடுங்க, பலமான இதய துடிப்புடன் ICU வாசலில் நின்றிருந்தான். சிறிது நேரத்தில் உள்ளிருந்து கடவுளின் மறுவுருவமாக கருதப்படும் DOCTOR வந்தார். பயப்படாதீங்க ஒண்ணும் இல்ல, கால் எலும்பு FRACTURE ஆயிருக்கு, மத்ததெல்லாம் சின்ன காயம்தான், 2 நாள்ல GENERAL WARD போயிரலாம், ஆனா, கால் சரியாக மூணு மாசம் ஆகும். ஓரளவு நிம்மதியுடன் அமர்ந்தார், “நீங்கதான் அந்த பொண்ணோட அப்பாவா? நிமிர்ந்ததில் போலீஸ்காரர் வாங்க என்னோட போலீஸ்காரருடன் எதிரில் இருந்த மண்டபத்திற்குள் நுழைந்தார். "உங்க பேர்தான் கதிரேசனா, இங்க பாருங்க கதிரேசன் இந்த மண்டபத்தோட கூரையை REPAIR பண்ண சாரம் கட்டிருக்காங்க, அவசரமா வேலையை முடிக்கணுங்கரதுகாக அரைகுறையா கட்டிருக்காங்க, உங்க பொண்ணு வந்தப்ப சாரம் ஒடஞ்சு விழுந்து அடிபட்ருச்சு, இவர்தான் அந்த CONTRACTOR, “சார் போனது போகட்டும், நான் உங்க ஆஸ்பத்திரி செலவை ஏத்துக்கறேன், ஒரு AMOUNT கொடுக்கறேன்கேஸ் எல்லாம் வேண்டாம் சார் ப்ளீஸ் கதிரேசனுக்கு சுரீரென கோபம் வந்தது யோவ் உங்களால என் பொண்ணு கல்யாணம் நிண்ணு போச்சுய்யா, இந்த கல்யாணத்திக்காக நான் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்ல, நான் உங்கல சும்மா விடமாட்டேன் என விம்மிய குரலுடன் கத்தினார். சார் தப்பு எங்க பேர்ல மட்டும் இல்ல, இங்க பாருங்க தடுப்பக்காக BAND கட்டி, SAFETY MEASURES எல்லாம் பண்ணிருக்கோம், கோர்ட்டுக்கு போனா உங்களுக்கு இதுவும் கிடைக்காது என ஒரு BOARD  காட்டினார். DO NOT CROSS – MEN AT WORK என அதில் எழுதப்பட்டிருந்தது, மேலும் அதன் கீழே சிறியதாய் எதோ எழுதியிருக்க கதிரேசன் அருகில் சென்று அதை படித்தான் நா....ரா.....ய.....ண....ன்

எளிமை படுத்தப்பட்ட கேயாஸ் தியரியை (CHAOS THEORY), மேற்கண்ட கதைமூலம் நாம் உணரலாம். நம்முடைய செயல்கள் நம் எண்ணங்களினால் விளைந்தது, விளைவுகள் செயல்களினால் விழைந்தது. ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்கும் வாழ்வியல் முறையில் ஒருவரது செயலில் உள்ள தவறு அவரையோ அல்லது அவர் சார்ந்த மற்றவரையோ நிச்சயம் பாதிக்கும். நம் தவறுகள் நம்மை நேரடியாகவும் உடனடியாகவும் பாதிப்பதில்லை என்பதினால், நாம் செய்யும் தவறுகளினால் மற்றவர்களும், இதே எண்ணம் கொண்ட மற்றவர்களால் நாமும் பாதிப்படைகிறோம். மிக எளிய உதாரணம் நம் அனைவராலும் நமக்கு ஏற்பட்டுத்தபட்ட நீர் மற்றும் காற்று மாசுபாடு.


பள்ளி வாகனத்தில் இருந்த ஓட்டை வழியாக ஒரு குழந்தை விழுந்து தன் உயிரை விட்டு, தற்போது தமிழ் நாட்டில் பள்ளிவாகனங்களை சீர்படுத்த வேண்டியிருக்கிறது. கும்பகோணத்தில் தீ விபத்தின் மூலம் குழந்தைகள் இறந்ததை யாரும் மறந்திருக்க மாட்டோம் எனினும் இன்றும் அடிப்படை பாதுகாப்பு வசதிகள் இல்லாத பள்ளிகளும், கல்லூரிகளும் நம்மிடையே உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. அடுத்த சுவாரசியமான நிகழ்ச்சி நடக்கும் வரை நாம் திருந்துவதும், பிறகு வழக்கம்போல் தவறு செய்வதும்தான் நம்மிடம் உள்ள மிகக்கொடுமையான வழக்கம். இன்று நம்மிடையே கீழ்க்கண்ட எதுவும் சுத்தமானதாக இல்லை என்பது (சில விதிவிலக்குகள் தவிர [THAT TOO < 2%]) நிச்சயம் நாம் வெட்கப்படவேண்டிய ஒன்று.


மழை நீர், நிலத்தடி நீர், சுத்திகரிக்கப்பட்ட நீர், காற்று.

அரசு, அலுவலகங்கள், அதிகாரிகள்.

டாக்டர்கள், மருந்துகள்.

சட்டம், நீதி, காவல் துறை.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்.

உழைப்பு, முன்னேற்றம்.

தனிமனித எண்ணம், ஒழுக்கம்.

ஆன்மிகம், சமயம், கலை, இலக்கியம், மொழி.

விளையாட்டு, பொழுதுபோக்கு.

உறவுகள்.

உணவு, தானியபொருட்கள்.
கல்வி, சமுதாயம், பொருளாதாரம்.  
கடைசியாக, எதிர்காலம்.


கல்வி, எண்ணங்களை சீர்படுத்தவும், முறையாக வெளிப்படுத்தவும் எனக்கு கற்றுத் தந்திருக்கிறது. அனால் அத்துடன் நின்றுவிடாமல் ஓரளவாவது அதை செயல்படுத்த நான் முயலவேண்டும், அதலால், அதன் முதல் படியாக கல்விகற்க வசதியற்ற சில குழந்தைகளை தெரிவு செய்து அவர்களுக்கு உதவ முயல்கிறேன். இதுவரை ஏறக்குறைய எந்த நல்ல காரியத்தையும் செய்யாத என் குறைபட்ட வாழ்க்கையின் ஓட்டை இதன் மூலம் அடைக்கப்படும் எனவும், எனது இந்த வாசகங்கள் எனக்கு உந்து சக்தியாக செயல்படும் என நம்புகிறேன்.


புவன் - யுவனுக்காக
முனுசாமி


Saturday, June 23, 2012

வாழ்க்கை

நாம் மிகவும் வேகமாகவும், தீர்க்கமாகவும் போய்க்கொண்டிருக்கிறோம். அனால், பாதை சரியானதுதானா?

தொலைபேசியை கண்டுபிடிக்கும் முன் அதன் இன்றைய பிரம்மாண்ட வளர்ச்சியை யாரும் கணித்திருக்க மாட்டார்கள். இருந்தாலும் தொலைத்தொடர்புத் துறை இந்த அளவு இந்தியாவில் வளர்த்திருக்க வேண்டாம். தொலைபேசி வர்த்தகம் உலகளவில் 2 % குறைந்த போதும் இந்தியாவில் அது 6 % வளர்ந்துள்ளது. இந்திய தொலைத்தொடர்புத் துறையில் நடந்த ஊழல் உலகையே மிரள வைத்தது என்றால் அது மிகையாகாது.

பள்ளியிலேயே மொபைல் மூலம் தவறாக வீடியோ எடுத்த செய்தியும் நாம் அறிந்ததே. இச்சாதனங்கள் எல்லாம் கண்டுபிடிக்கும் முன்னர் படிப்பு என்பது தரமானதாகவும், எளிதாகவும், வலிமையாகவும் இருந்ததை யாரும் மறுக்க முடியாது. இன்று அனேக மாணவர்கள் பள்ளியிலேயே மொபைல் ஆகிறார்கள். இல்லாத சிலர் பெரும் விரக்தியில் வாழ்வின் ஓரத்திற்கு சென்றுவிடுகிறார்கள், சிலர் மனவலிமையுடன் தங்களுக்கான நேரம் வரும் வரை காத்திருக்கிறார்கள். மொபைல் இவர்களிடத்தில் நோபலுக்கான இடத்தை எப்படியோ பெற்றுவிட்டது

இன்று மொபைல் போன் மூலம் பரிமாறப்படும் தகவல்களில் அதிகமானது, தவறானது என்பதும், இதற்காக நாம் செலவழிக்கும் நேரமும், பணமும் நம் வாழ்கையை பின்னுக்கு இழுப்பதும் பலரால் அறிந்த, சிலரால் அறியாத உண்மை. மாணவ பருவத்தில் நிகழும் அநேக தவறுக்கு மொபைலும் ஒரு காரணம்.

சிறு சிறு தவறுகளை பெரிதாக்குவதால் எந்த பலனும் இல்லை. ஆம் அனால் இந்த சிறிது என்பது அளவால் அமைவது இல்லை ATTITUDE-ஆல் அமைவது.

1. கிண்டல் - ராகிங் - ஈவ் டீசிங்
2. பணம் - வரதட்சனை கொடுமை - உயிருடன் எரிப்பு
3. Power bike - Super hero - வாகன விபத்து - உயிரிழப்பு
4. காதல் - காமம் - கற்பழிப்பு - கொலை
5. Adjustment - அன்பளிப்பு - லஞ்சம் - ஊழல் - சுவிஸ் வங்கியில் கோடிகள் 

மேலே குறிப்பிட்ட எதுவும் மிகைபடுத்தபட்டது அல்ல. நாம் தினமும் செய்திதாள்களில் படிப்பதே ஆகும். நாம் சம்மந்தப் படாதவரை அவை நமக்கு வெறும் செய்திகளாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது. மேலே கூறப்பட்ட செய்திகள் கீழே உள்ள நிகழ்வுகளாக, அதுவும், நமக்கு நடக்கும் போதுதான் நாம் அதன் சுயரூபத்தை உணர்கிறோம்.

1. கல்லூரிக்கு சென்று முதல் மாத முடிவில் ஒருநாள், ஆசையாய் கேட்ட Contact Lens - வாங்கி வைத்து, வருகைக்காக வாசலை நீங்கள் பார்க்கும் நேரம், மகன்/மகள் கல்லூரியில் அசம்பாவிதமாக இறந்து விட்டதாக செய்தி வந்தால்,
2. திருமணமான 8 ஆம் நாள் புகுந்த வீட்டின் சமயலறையில் மகள் கரிக்கட்டையாக கிடப்பதை பார்க்கும் போது,
3. விளையாட சென்ற பிள்ளையை தேடி, ICU - ல் கண்டெடுக்கும் போது,
4. காதல் வற்புறுத்துதலால், முகத்தை ACID - க்கு பலிகொடுக்கு போது,
5. திருவிழாவில் பிள்ளை தொலைந்து, பசிக்கொடுமையால் பிச்சை எடுக்கும் போது,

தவறு செய்பவர்களை கண்டிக்கும், தண்டிக்கும் எண்ணம் நாம் நேரடியாக பாதிக்கப்போது தான் நமக்கு வருகின்றது. அனால் இந்த தவறுகளுக்கு, நம்முடைய இந்த ATTITUDE-ம் ஒரு காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது. சாவும், துக்கமும் அனைவருக்கும் பொதுவானதுதான், அனால் ஒருவரின் சுவிஸ் வங்கி கணக்கை உயர்த்த 1000 பேரை பட்டினிக்கு பலியிடுவது......?

மாற்றப்படவேண்டியது தனிமனித எண்ணங்களும் அதனால் விழைந்த பழக்கங்களும். இதுவே சமுதாய சிந்தனை மற்றும் செயல்பாடுகளை தீர்மானிக்கின்றது....

நாம் அன்றாட வாழ்கையில் நிகழும் பல நிகழ்வுகள் கேள்விக்குரியதாய் ஆகிவிட்டது. பின்வரும் சிலவற்றிக்கு நாம் தற்போது கொடுக்கும் இடமானது சரியானதுதானா?

1. CELL PHONE - அவசர மற்றும் அத்யாவசியத்திற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கருவி தற்போது முதலிடம் பிடித்துள்ளது நம் பட்டியலில்.
a) CELL PHONE இல்லாமல் இருத்தல்
b) அவசியமான தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும் பயன்படுத்துதல்
c) தேவையான அளவு தகவல் மற்றும் பொழுது போக்கிற்காக பயன்படுத்துதல்
d) எப்பொழுதும் பயன்படுத்துதல் (என் நண்பர் ஒருவர் Toilet - போவதற்கு Alarm வைத்துகொள்கிறார் mobile -ல்)
e) Mobile Network - யே அலறடிக்கும் அளவிற்கு பயன்படுத்து.

2. T.V - அனைத்து வீடுகளிலும் உள்ள செல்லமான IDIOT BOX
a) நாளொன்றுக்கு 1 மணி நேரம் அதற்கும் கீழ்
b) நாளொன்றுக்கு 3 மணி நேரம்
c) நாளொன்றுக்கு 6 மணி நேரம்
d) நாளொன்றுக்கு 10 மணி நேரம் அதற்கும் மேல்

3. COMPUTER - பொதுவாக தொழில்/கல்வி சார்ந்த உபயோகத்தில் இதை நாம் எடுத்துக் கொள்ளலாம்
a) அனைத்திற்கும் Comp உதவியை நாடுவது, மேலும் அதன் அடிப்படையை தெரிந்து கொள்ளாதது
b) வேண்டிய வேலைகளுக்கு மட்டும் பயன்படுத்துவது, அதன் நுட்பங்களை அறிய முற்படுவது
c) Comp செய்யும் அனைத்தையும் செய்ய முயன்று தோற்பது/எப்போதாவது வெல்வது

4. SHOPPING - எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் நாள் முழுக்க MALL -லிலேயே கழிக்க விரும்புபவர், அவர் தனது சொந்த வீட்டை விட்டு MALL -லுக்கு அருகில் வாடகைக்கு சென்றுவிட்டார்
a) எப்பொழுதும் "OUTING"-ல் இருக்கணும்
b) அடிக்கடி ஷாப்பிங் போகணும்.
c) எப்போதாவது போகணும்
d) போகவே கூடாது

5. MONEY - பணம் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை அனால்
a) SWISS BANK -ல் ACCOUNT [இதை எப்படி நான் தமிழ்ல எழுதுவேன்]
b) அம்மா, அப்பாவிடம் "இந்தமாசம் ரொம்ப பணக்கஷ்டம் அடுத்த மாசம் பணம் தர்ரேன்" என்ற நிலையில் சொந்தமாக ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டுதல்.
c) சரியாக சாப்பிடாமல் பணத்தை சேமிப்பது.
d) சேமிக்க முயலாதது
e) டாஸ்மாக் ல் Account வைப்பது

காதல், விளையாட்டு, நாகரீகம், மற்றும் பல அடுத்த பதிவில்.

மேற்கூறியவற்றில் நான் 1-c ), 2-a), 3-a), 4-d), 5-c)-ல் இருக்கிறேன். 1-b), 2-b), 3-b), 4-c), 5-d) -ல் இருக்க விரும்புகிறேன். உங்கள் விருப்பத்தை Comment-ல் இடவும். நம்முடைய இந்த செயல்களுக்கு தக்கவாறு பலன் கிடைப்பது நிதர்சனம். இருப்பினும் நம்மால் சில சமயம் நம் செயல்களை மாற்றிக்கொள்ள முடிவதில்லை.

நாம் வாழ்வின் வெற்றி தோல்விகளை தீர்மானிப்பது நம் முன் உள்ள வாய்ப்புகளுக்கு நாம் தரும் வேறுபட்ட முக்கியத்துவமே ஆகும். உதாரணமாக அதிகமாக Cricket பார்பவர்கள் சச்சின் அல்லது Play ground Watch man ஆகலாம், அதிகமாக Cinema பார்பவர்கள் ரஜினி அல்லது Cinema Theatre சீட்டு கிழிப்பவராக ஆகலாம். அதிகமாக Cell Phone நோண்டுபவர்கள் Steave Jobs அல்லது Cell Phone கடை எடுபுடி ஆகலாம். அதிகமாக படிப்பவர்கள் Engineer அல்லது பைத்தியம் ஆகலாம். படிக்காமல் பீடி வலி(குடி)த்தவர்கள் மந்திரி அல்லது பிச்சைக்காரன் ஆகலாம். அகவே நம் செயல்கள் நிச்சயம் நம் பாதையை தீர்மானிக்கிறது. கடவுள் தன் கையில் வைத்திருப்பது, நாம் சென்றடைவது Upper Limit-கா? Lower Limit-கா? எனும் முடிவு மட்டும்தான். தவறான பாதையில் செல்பவரும் சரியான பாதையில் செல்பவரும் Upper Limit- நோக்கியே செல்கின்றனர். அனால் சரியான பாதையில் செல்பவருக்கு பெரும்பாலும் முடிவு சரியாக அமைகிறது சில விதிவிலக்குகள் தவிர. ஆம் வாழ்க்கை STATISTIC – பின்பற்றுகின்றது. விதிவிலக்குகள் STANDARD DEVIATION – ஆக அமைகின்றது.

புவன் - யுவனுக்காக
முனுசாமி

(அடுத்து: வாழ்க்கை #2 \ 29-06-2012)
தங்களின் கருத்துக்களை Comments-ல் இடவும். (கேள்விகள் வரவேற்கப்படுகின்றன)