Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Thursday, August 9, 2012

தலைப்பை தேடி.....#1


கொடுமையில் கொடுமை ENGINEER-ஆக இருப்பது
அதனினும் கொடுமை CIVIL ENGINEER-ஆக இருப்பது
அதனினும் கொடுமை படித்ததை அரைகுறையாக ஞாபகம் வைத்திருப்பது

கோயம்பத்தூர் சென்னை VOLVO A/C  பேருந்து - SEMI-SLEEPER - ON-LINE மூலம் பதிவு செய்யப்பட்ட பயணசீட்டை, பேருந்தில் அமர அனுமதிக்கும் போதுதான் முழுமையாக நம்பமுடிகிறது, ஏனென்று தெரியவில்லை - அனைத்து சாலைவிபத்து நிகழ்வுகளும் மனத்திரையில் வேகமாய் ஓடியதை என்னால் தடுத்து நிறுத்த முடியவில்லை – வேறு வழியில்லாமல் நானும் சாமி கும்பிட்டேன் - பேருந்து எடுக்கும் வரை என் சீட்டுக்கு வேறுயாரும் சண்டைக்கு வராதது, கடவுள் எனக்கு அளித்த முதல் வரமாய் நம்பினேன் – இரண்டு சீட்டு தள்ளி இதே சண்டை நடந்ததை என் மனம் ரசித்தது ஏன் என்று தெரியவில்லை – வண்டியின் உயரமான இடத்தில் நாம் அமர்வது நல்லதா? - ஒரு வழியாக வண்டி கிளம்பியது

நகர்புறத்தை தாண்டி பேருந்து வேகமெடுத்தது - வேகமாக வேறொரு வண்டியை CUT அடித்தார் ஓட்டுநர், CUT என்பது வேகமாக வளைத்து மற்றொரு வண்டியை தவிர்ப்பது (பெரும்பாலும் விபத்துகள் இந்த சமயத்தில்தான் நிகழ்கின்றது) - என்னுள் அதுவரை உறங்கிய(?) ENGINEER விழித்ததை நான் சற்றும் விரும்பவில்லை – வண்டியின் வேகம் தோராயமாக மணிக்கு 60 – 80 km – கட் அடிக்கும் போது வண்டியின் இயக்கம் SIMPLE HORMONIC MOTION (SHM) ஆக இருக்கும், மேலும் இதனால் வண்டியின் மேல் மைய விலக்கு விசை (CENTRIFUGAL FORCE) செயல்படும் – இது வண்டியின் வேகம் மற்றும் திரும்பும் ஆரம் (RADIUS) இவற்றை பொறுத்து அமையும் – வண்டியில் உயரமான இடத்தில் நாம் அமர்வதால் வண்டியின் CENTRE OF GRAVITY புள்ளி உயர்கிறது – மிக வேகமாக கட் அடிக்கும் போது மைய விலக்கு விசை உயர்கின்றது – வண்டியின் பாரம் மற்றும் மைய விலக்கு விசை ஆகியவற்றின் RESULTANT வண்டியின் நான்கு சக்கரங்களுக்கு மத்தியில் விழும்போது வண்டி பாதுகாப்போடு செல்கிறது - மைய விலக்கு விசை உயர உயர RESULTANT வண்டியின் நான்கு சக்கரங்களிருந்து விலகி விழும் இது நமக்கு மறுநாள் தினத்தந்தியில் இடம் ஒதுக்க வழி செய்கிறது – விலையுயர்ந்த SUV வண்டிகளில் சக்கரங்கள் வெளிப்புறம் தள்ளியிருக்க இந்த STABILITY CRITERIA தான் காரணம் 

ஒருவழியாக அடுத்த சில மணி நேரத்தில் வண்டியின் பாதுகாப்பு குறித்த என் கணக்கீடுகள், குழப்பத்தின் உச்சத்தை அடைந்து, முடிவு எட்டப்படாமலே முடிந்தது – அரைகுறை துக்கத்துடன் சென்னை என்னை வரவேற்றது – அனைவரும் பாதுகாப்பாக வந்து சேர்ந்ததற்கு சாமி கும்பிட, நானும் கும்பிட்டேன் இனிமேல் பயணம் செய்யும் போது என் குறைபட்ட அறிவை அழித்திட வேண்டும் என்று.

கொடுமையில் கொடுமை ENGINEER-ஆக இருப்பது
அதனினும் கொடுமை CIVIL ENGINEER-ஆக இருப்பது
அதனினும் கொடுமை படித்ததை அரைகுறையாக ஞாபகம் வைத்திருப்பது
.....................................................................*
இந்தியாவில் தற்போதுள்ள கல்விமுறையில் நாம் மாணவர்களுக்கு அதிக அளவிலான தகவல்களை கற்பிற்கின்றோம் அனால் சுவாமி விவேகானந்தா கூறியது போல் வெறும் தகவல்களை சேகரிப்பது கல்வியன்று. உதாரணமாக நியுட்டனின் மூன்று இயக்கவியல் விதிகளும் நம் மாணவர்களில் அநேக பேர்க்கு தெரிந்திருக்கலாம் அனால் அதன் அர்த்தம் தெரிந்தவர்கள் மிக மிக சிலரே. இந்த விதிகளின் முக்கியத்துவம் உயர் படிப்பு மேற்கொள்பவர்களுக்கு மட்டும் தெரிவது நம் கல்வி முறையின் தோல்வியே. மாணவர்களிடையே நியுட்டன் மற்றும் திருவள்ளுவர் முறையே 2 மற்றும் 5 மதிப்பெண் அளவே தகுதி பெற்றிருப்பது நாம் வளராததற்கு மிக முக்கிய காரணம் என கருதுகிறேன். 


என்னுடன் பணியாற்றும் இத்தாலிய நண்பருடன் உரையாடும் பொழுது, அவர்களது நாட்டில் பொறியியல் பட்டம் பெறுவது மிகவும் கடினம் என்றும் சிலருக்கு பட்டம் பெற முதல் 10 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்ளும் எனவும் கூறினார். அந்நாட்டில் ஆண்டுகள் பணிபுரிந்த ஒருவர் இங்கு 10 ஆண்டுகள் பணிபுரியும் ஒருவருக்கு உயரதிகாரியாய் இருப்பது அவர்களது மற்றும் நமது கல்விமுறையின் நிலைமையை தெளிவாக உணர்த்துகிறது. அளவுக்கு அதிகமான சுமையை குழந்தைகள் மீது சுமத்தி, எதுவும் புரியாமல் அதிகமாக கற்பிற்கப்படுவதை விட, குறைவாகவும், தீர்க்கமாகவும் கற்பிற்கப்படுவதே சிறந்தது. இதற்கு முறையான அரசின் திட்டமும், பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளும், ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சியும் தேவை. அதன்பின் மாணவர்களின் அறிவை சோதிக்கலாம்.


புவன் - யுவனுக்காக
முனுசாமி

Monday, May 28, 2012

கல்வி பற்றி விவேகானந்தர்


நண்பர் ஒருவர் தனது வலையில் மாணவர்களை படி படி என துன்புறுத்தும் பெற்றோர்களையும், படிப்பதற்காக அறிவுரை கூறும் (என்னைபோன்ற) ஆட்களையும் கிழி கிழி என கிழித்திருந்தார். என் பெற்றோரும் என்னை படிக்கச்சொல்லி வற்புறுத்தியது கிடையாது (அவருக்கும்). கிழிக்கப்பட்டாலும் அவரது கருத்துக்களை நான் அமோதிக்கிறேன். அனால் நல்ல விதிகளை (Principles) செயல்படுத்துவது சில சமயம் தவறாகிவிடும். எந்த ஒரு முடிவையும் எடுக்கும் ஒருவருக்கு அந்த முடிவை எடுக்குமளவிற்கு முதிர்ச்சியும், பக்குவமும், அறிவும் இருப்பது அவசியம். தன் வாழ்கையைப் பற்றி முடிவெடுக்கும் உரிமை நிச்சயம் ஒருவருக்கு உண்டு அனால் அது அவர்களுக்கு நன்மை பயக்குமா என்பதும் தீமையாக அமைந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருக்குமா என்பதும் நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று. குறிப்பாக, கல்லூரி படிப்பு, வாழ்க்கைத் துணை, எதிர்காலம் மற்றும் குழந்தைகள், முதலிய வாழ்கையை தீர்மானிக்கும் முடிவுகள் ஒருவரால் சாதாரணமாக எடுக்கப்படும்போது, அவை அவர்கள் மீது அக்கறை கொண்டவர்களுக்கு கலக்கத்தையே உண்டு பண்ணும். எந்த ஒரு முடிவினையும் எடுக்கும் திறமையும், அதன் விளைவுகளை எதிர் கொள்ளும் மனோதிடமும் தன்னிடம் இருப்பதை ஒருவர் தன் மேல் அக்கறை உள்ள ஒருவருக்கு நிருபிப்பதும், புரியவைப்பதும் அவரது கடமையாக அல்லாமல் அவர்களது அக்கறைக்கு இவர்கள் காட்டும் மதிப்பாக இருக்க வேண்டும்.



பிரபல திரைப்படம் ஒன்றில் மாணவர் ஒருவர் தன் விருப்பத்திற்கேட்ப படித்தது போலவும், அதனால் அவர் உயர்ந்தது போலவும் காண்பிக்கப்பட்டார், மேலோட்டமாக நன்று. அனால் படத்தில் எங்கும் அவர் படிப்பது போல் காட்டப்படாததும், முடிவில் அனைவரை விடவும் பணக்காரராக அவர் ஆக்கப்பட்டதும் - படிக்காதது: அது யாராலும் விரும்பப்படாததாலும், பணக்காரராக ஆக்கப்பட்டது: அது அனைவராலும் விரும்பப்படுவதாலும் என்பது அடிப்படையில் தவறானது ஆகும். முடிவில் அந்த மாணவர் அதிகமாக பணம் சேர்க்காத, ஓட்டு வீட்டில் இருக்கும் ஒரு சாதாரண மனிதனாக, தனது அறிவை அனைவருக்கும் கற்பிக்கும் ஆசிரியனாக காட்ட முடியாதது நம் சமூகத்தின் தோல்வியே.

இனி தலைப்புக்கு வருவோம்

கல்வி என்பது ஒருவன் தன் மனதை (Concentration) எந்தவொரு பொருளின் மீதும், தேவைப்படும் பொழுது செலுத்துவதும் (ஒருங்கிணைப்பதும்), தேவைப்படும் பொழுது அகற்றுவதுமேயாகும். வெறும் தகவல்களை சேகரிப்பது கல்வி அன்று.
விவேகானந்தர்

உதாரணமாக, தன் மனதை ஆளத்தெரிந்தவனுக்கு, ஐ பி எல் சீசனிலும் செமஸ்டர் எழுத முடியும், அழகான பெண் மறைக்கும் போதும் பேருந்தில் திருக்குறள் படிக்க முடியும். இது கல்வி மட்டும் அல்ல, உண்மையில் இதுதான் வாழ்கை. அந்த காலத்தில் மின் விளக்கு இல்லாதபோதும் மேதைகள் உருவானதும், இன்று A/C class room-ல் மாணவர்கள் Depression-க்கு உள்ளாவதும் இதனால்தான். நமது கல்வி இதை கற்பிக்காத போதுதான், உயர்ந்த மதிப்பெண் எடுத்த ஒருவனால் வாழ்வில் முன்னேற்றம் காண முடியாமல் போகிறது. இங்கு முன்னேற்றம் என்பது பணம் அல்ல. இன்று நாம் அதிகமாக பணம் சம்பாதிக்கிறோம் அனால் அதற்கு விலையாக ஆரோக்யத்தை, நிம்மதியை, வாழ்வின் அர்த்தத்தை கொடுத்து வருகிறோம்.

நம்மை சுற்றிலும் பல அதிசயங்களும், உண்மைகளும் உலகில் பரவிக்கிடக்கின்றது, அனால் அதை பார்பதற்கு நாம் நம் பார்வையை சீர்படுத்திக்கொள்ள வேண்டும்.
விவேகானந்தர்


அனைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளையும் விவேகானந்தர் அவை இவ்வுலகில் ஏற்கனவே இருந்ததாகவும், அதை கூர்ந்து நோக்கிய கவனம் அறிவியலர்களிடம் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். இந்த கவனமும், பார்வையும் தான் நியூட்டனை ஆப்பிள் மூலமும், கலிலியோவை நட்சத்திரம் மூலமும், ஆர்ய பட்டாவை கணிதம் மூலமும் தலை சிறக்க வைத்தது. இன்று நாம் நோய்களை பெருக்கி, நோய்களுக்கு மருந்து கண்டுபிடிப்பவர்களுக்கு நோபல் கொடுத்து, அறிவை போற்றுகின்றோம்.


விவேகானந்தரின் வாழ்வியல் கோட்பாடுகள், இந்த வலைப்பூ போல் சுவாரசியம் இல்லாமல் இருப்பதாலோ என்னவோ, வாழ்வியலை உலகுக்கு சிறப்பாக போதித்த அவரை, இந்த வேகமான வாழ்கையில் மறந்து விட்டோம்.

இன்று நாம் அனைவரும் வேகமாகவும், தீர்க்கமாகவும் போய்கொண்டிருக்கிறோம், அனால் போகும் பாதை சரியானதுதானா?

புவன் - யுவனுக்காக
முனுசாமி

(அடுத்து: இரட்டையர்கள்\04-06-2012)
தங்களின் கருத்துக்களை Comments-ல் இடவும். (கேள்விகள் வரவேற்கப்படுகின்றன)

Tuesday, May 22, 2012

கல்விமுறையில் மாற்றம் தேவை

அன்று எளிமையாகவும் ஆழமாகவும் இருந்த வாழ்கையை நாம் இன்று COMPLICATE-ஆகவும் அர்த்தமற்றதாகவும் ஆக்கிக்கொண்டோம். 

அதிகாலையில் எழுந்து நீராகாரம் குடித்து (உணவே மருந்து), செருப்பு அணியாமல் காட்டுக்கு நடந்து சென்று (அக்கு பஞ்சர்), வழியில் வேப்பம் குச்சியில் பல் துலக்கி (ஆரோக்கியமான Tooth Paste), இள வெயிலில் வியர்வை சிந்த வேலை செய்து (உடற்பயிற்சி), காலை விடு திரும்பி பசியாற உணவு உண்டு (STAR சமையல்), அடுத்த வேளை வேலை.... இன்று இவை அனைத்தும் டிவி-நிகழ்ச்சிகளாகிவிட்டது. Pressure, Sugar உள்ளிட்ட அனைத்து வியாதிகளுடன் நாம் அந்நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டிருக்கிறோம்



+2 ரிசல்ட் வந்துவிட்டது வழக்கம் போல் முதல் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்கள், டிவி, fm , News பேப்பர் ஆகியவற்றில் தான் அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுவது, புரிந்து படிப்பது, படித்ததும் எழுதி பார்த்தது ஆகியவைதான் காரணம் என்றும் தனக்கு உதவி செய்த அம்மா, அப்பா, அத்தை, தம்பி, டீச்சர், பக்கத்துக்கு வீடு பாலு ஆகியோருக்கு நன்றி என்றும் சொல்வார்கள், கேக் ஊட்டுவார்கள், சாக்கலட்கொடுப்பார்கள். மதிப்பெண் குறைவாக எடுத்து அடி, திட்டு வாங்கி சோகமாக சில நாட்கள் சிலருக்கு.




எது எப்படி இருப்பினும், படித்து மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.



தேர்வில் தேறிய, தவறிய எத்தனை பேர்க்கு கல்வியின் அவசியம் மற்றும் வாழ்வில் அதன் பங்கு தெரியும் என்பது கேள்விக்குறியே. தான் எடுத்த மதிப்பெண்கள் குறைவாக இருந்தபோதும் அதை உளமார ஏற்று மகிழும் முதிர்ச்சி அனைவருக்கும் இருக்க வேண்டும். ஆம் தன் படிப்பையும், எண்ணத்தையும், வாழ்க்கையையும், செயல்களையும் எவன் ஒருவன் தெரிந்து, புரிந்து, அனுபவித்து மேற்கொள்கிறானோ அவனே வாழ்வில் சிறக்க முடியும் என சுவாமி விவேகனந்தர் கூறுகிறார். தன்னுடைய அனைத்து செயல்களுக்கும் தானே பொறுப்பேற்று அதன் நன்மை, தீமைகளை துணிச்சலாக எதிர்கொள்பவனையே அவர் வீரமான மானிடனாக குறிப்பிடுகிறார்.


பொதுவாக எந்த லாபமும் இல்லாமல் விவேகனந்தரையும், வீரத்தையும் யாரும் விரும்புவதில்லை

கல்வி நிறுவனங்கள் தீபாவளிக்கு தயாராகி விட்டன. கல்வி விற்கப்படுவது தவறா?. 1980 -களில் பெரும் மதிப்புடனும், 2000 -களில் மதிப்புடனும்,  இப்போது மதிப்பற்றும் இருக்கும், அதாங்க பி.இ., அதை படிக்க மாணவர்கள் தயாராகி விட்டார்கள், பெற்றோர்களும் கனவுக்காகவோ, ஆசைக்காகவோ, கடமைக்காகவோ, கடனுக்காகவோ, வேறு வழியில்லாமலோ, சில சமயம் என்னவென்று தெரியாமலோ, தங்களது பணத்தை தொலைக்க தயாராகிவிட்டனர். இனிவரப்போகும் 4 வருடங்கள் மாணவர்களுக்கு வசந்தகாலமாக இருக்கும் (இப்பெல்லாம் டிபன்-ல சாப்பாடு கொண்டுபோரதில்ல... Image spoil - ஆகுதாம்). பெற்றோர்கள் மகன் நான்கு வருடங்களில் குடும்பத்தை தாங்கும் வலிமையோடு வந்துவிடுவானென நம்புகிறனர். மூன்றாவது வருடத்தில் தங்களது எதிர்பார்ப்பு தவறு என்பதை உணர்கின்றனர். பெற்றோர்களையும், மாணவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. இன்று மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் அப்படிப்பட்டவை,

நன்கு படித்து ஒரு மெட்ரோ சிட்டி-ல் நல்ல சம்பளத்தில் வேலைக்கு செல்ல வேண்டும்
சுமாராக படித்து ஓரளவு சம்பாதித்து, தங்கையின் திருமணதிற்கு உதவவேண்டும்
படிக்காவிட்டாலும் தன்னளவு சம்பாதித்து தன்னை பார்த்துக்கொள்ள வேண்டும்

இன்று இதில் ஏதேனும் ஒரு பிரிவில் வரும் ஒருவன், ஒரு கட்டத்தில் வாழ்கையையும் சமுதாயத்தையும் புரிந்து கொள்கிறான். சம்பாதிக்கும் ஒருவன் அதை தன் மகிழ்ச்சிக்காக செலவு செய்வது தவறில்லை என வழிநடத்தப்படுகிறான். மற்றவர்களுக்கு உதவி செய்வது கட்டாயமில்லை எனவும் தவறாக சம்பதிப்பவர்களை விட தான் மேல் எனவும் நம்புகிறான். மற்றவர்களை போலவே தனக்கும் மகிழ்ச்சியாக வாழ உரிமை உள்ளதாகவும், அனால் நேர்மையாக சம்பாதிக்க சமுதாயம் தன்னை விடவில்லை எனவும் தவறு செய்பவன் கூறிக்கொள்கிறான். முடிவில் தவறாக இருப்பினும் சம்பாதிப்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. நாமும் கல்வி விற்கப்படுவதை ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.

சரி இனி தலைப்புக்கு வருவோம். கல்வி முறையில் சட்ட ரீதியான, கல்வி ரீதியான, விஞ்ஞான ரீதியான மாற்றங்களை காட்டிலும், மக்கள் மன  ரீதியான மாற்றம்தான் முக்கியம். விவேகானந்தரை பின்பற்றினால் தவிர கல்வியையும், சமுதாயத்தையும் ஒருங்கே திருத்தமுடியாது. விவேகானந்தர் கல்வி பற்றி என்ன கூறியுள்ளார்.. 

புவன்-யுவனுக்காக
முனுசாமி

(அடுத்து: கல்வி பற்றி விவேகானந்தர்\28-05-2012)

Wednesday, May 16, 2012

இன்றைய கல்வி முறை





தன் குழந்தையை வழக்கம் போல் வேடிக்கை காட்ட, இன்று Airport வாசலில். நேர்மை, உண்மை, உழைப்பு ஆகிய குணங்கள் குழந்தைகளுக்கும் வரவேண்டுமெனும் ஆர்வம். இதுவரை பயணம் செய்யாததால் விமானம் பார்பதற்கு பிரமிப்பை ஏற்படுத்தியது. மிகவும் அவசரமாக காரில் வந்த ஒரு குடும்பம், தவறுதலாக குறுக்கே வந்த தன் குழந்தையை "தள்ளிப் போ" என, உச்ச கோபத்தையும், மன வருத்தத்தையும் அப்போது வெளிக்காட்ட முடியவில்லை. ஆதங்கத்தில் தன் நண்பனிடம் பிறகு சொல்ல "அட விடுப்பா.... பணம் பண்ற வேலை, நீயும் சம்பாதி.. அப்ப தெரியும்". அடுத்து வந்த சில வருடங்களில் தன் கொள்கைகளை long term fixed deposit செய்து, தன் கோபத்தையும், மன வருத்தத்தையும் பணமாக பரிமாற்றம் செய்து, மகனை மேல்நாட்டிக்கு படிக்க அனுப்புவதற்காக, Airport வாசலில். "சீக்கரம்.. சீக்கரம்...நான் அப்பவே சொன்ன.... வீட்டுல கும்புட்டது போதும் கோயிலுக்கு போன லேட் ஆகும்னு...கேட்டாதானே" வேக வேகமாய் பெட்டியுடன் ஓட, இடையில் வந்த ஒரு குழந்தையை "அட தள்ளுப்பா". Security Check முடிந்து, கிளம்பும்போது நிம்மதியுடன் கையசைக்க........

தள்ளிப் போ தாங்கமுடியாத நாம் அதையே பின்நாளில் சொல்ல வேண்டியதாகிவிடுகிறது. இது தவறா? சரியா?

பேருந்தில் முதியவர்களுக்கு எழுந்து சீட் கொடுக்காததும், சுவிஸ் வங்கியில் கோடிகளை குவிப்பதும் மற்றவர்களை நாம் மறப்பதாலும், உதவ மறுப்பதாலும் விழை(ளை)கின்றது. இரண்டுக்கும் SCALE மட்டும் தான் வேறு. முன்னது MICRO ERROR, பின்னது MACRO CRIME. பதிவை எழுதியவரும், படிப்பவரும் இந்த இரு புள்ளிகளுக்கு இடையே எங்காவது இடம் பெற்றுவிடுகின்றனர்.

சிலர் ME பக்கத்தில், சிலர் MC பக்கத்தில் (நம்மால ஏன் MC பக்கத்துல போக முடியமாட்டேங்குது). இந்த இந்தியன் விளைவு நம் வாழ்வின் அனைத்து சமாச்சாரங்களிலும் விளையாட ஆரம்பித்துவிட்டது. விவசாயம், தொழில், கல்வி, அரசாங்கம், சமுதாயம், அறிவியல், குடும்பம், மருத்துவம், மற்றும் பல

கல்வியை பார்ப்போம்

சட்ட விரோதமாக பணம் கொடுக்க அல்லது வாங்க மறுக்கும் எவரும் இன்று பாட சாலைகள் நிறுவ முடியாது. (அவசரப்பட்டு நிறுவ வேண்டாம் என வேண்டாம்). இவ்வாறு விதிகள் தளர்த்தி முளைக்கும் கல்வி நிறுவனங்கள், பணத்தை சம்பாதிக்கவும் தளர்த்துகின்றது, விளைவு கல்வித்தரக்குறைவு. சமீபத்தில் பள்ளியே மாணவர்களுக்கு 'பிட்' கொடுத்தது ஒரு நல்ல உதாரணம்.

பத்தாவது படிக்கும் போது எட்டாவது பெண்ணுக்கு லெட்டர் கொடுத்து, அடி வாங்கி, நிமிர்ந்து நடந்த நம் மாணவன், ரிசல்ட் பார்த்ததும் தற்கொலைக்கு முயல்கிறான். இதற்கு காரணம் படிப்பில் ஆர்வமா?, சுற்றியிருப்பவர்களின் தொல்லையா?, மன உறுத்தலா?. எது எப்படியாயினும் இதை தடுத்து நிறுத்த நாம் இப்போது பின்பற்றும் தற்காலிக(?) வழி 'அனைவரும் பாஸ்'. விளைவு ..கு.

பெற்றோர்கள் எதோ ஒரு வகையில் பங்களிக்கின்றனர். நல்ல பள்ளிகளை அடையாளம் காணவும், அளவிடவும் முடியாமல் இருப்பது. நல்ல பழக்கவழக்கங்களை விட மார்க்குகளை மதிப்பது. (பொதுவாக வீடுகளில் நூலகம் இல்லை - video game உண்டு). இன்று அதிக மதிப்பெண்ணும், கேம்பஸ் Interview-ல் வேலையும் கிடைத்தால் போதும் எனும் உயரிய நோக்கத்துடன் பிள்ளைகளை வளர்க்க, அது இவர்களை முதியோர் இல்லத்திற்கும், மகனை வசதியான வாழ்க்கைக்கும் அனுப்புகிறது. வழக்கம்போல் இது வெற்றி எனப்படுகிறது. கல்வி வாழ்கையின் அர்த்தத்தை அழித்து, வசதியை பெருக்குகின்றது.

30 ஆண்டுகளுக்கு முன்னால் இளங்கலை பட்டம் பெற்ற ஒருவரது அறிவு இன்று முதுகலை பட்டம் பெரும் ஒருவருக்கு வருவதில்லை. 9.1 CGPA வாங்கிய ஒருவர் நேர்காணலில் கேட்கும் கேள்விகளுக்கு புன்னகையை பதிலளிக்கிறார். இந்தியாவின் கல்வி முறை, தொழில் துறை மற்றும் வாழ்க்கை முறையிலிருந்து பெரிதும் மாறுபடுவதும் மற்றுமொரு கொடுமை.

நாமும், கல்வி முறையும் நிச்சயம் மாறவேண்டும், அனால் எப்படி?

நேற்று பஞ்சர் ஆன வண்டியை சரி செய்து மகிழ்ச்சியுடன் (இந்தவாட்டியும் டுயுப் மாத்தலையே) செல்லும்போது நான் கண்டது, ரோட்டோரத்தில் ஒரு கணவனும், மனைவியும் சண்டையிட்டுக்கொள்ள, சரி இது நம் பாரம்பரிய விளையாட்டுதானே என செல்ல முயலும்போதுதான், அந்த பெண்மணியுடன் இருந்த அவளது பெண் பிள்ளையை பார்த்தேன். எப்போதும் காமெடி கலந்த என் மூளையின் நியுரான்கள் வருத்தப்பட்டன. சமுதாயத்தையும், வாழ்க்கையும், தன் பெற்றோர்களின் சண்டையையும் சரியாக புரிந்து கொள்ள முடியாத அந்த சிறுமியின் மனது நிச்சயம் குழப்பமும், வருத்தமும் நிறைந்திருக்கும்.

குழப்பமும், வருத்தமும் முறையே சிகரெட், மது போன்றது. தனியாக ஏற்படுத்துவதைவிட ஒன்றுசேர்ந்தால் பலமடங்கு தீங்கை ஏற்படுத்தும். அந்த சிறுமியின் மனபலம் நிச்சயம் பாதிப்படையும். சில சமயம் வலிமையையும் பெறலாம். ("டேய் தம்பி ராகிங் பண்றதே உன்னை தைரியமா ஆக்கரதுக்குதாண்டா"-பல ஆண்டுகளுக்கு முன் சீனியரின் ஆறுதல் மொழி). மன வலிமை இதுபோல் வளர்வது மனதுக்கு வலித்தது.

புவன் - யுவனுக்காக
முனுசாமி

(அடுத்து : இன்றைய கல்வி முறையில் தேவையான மாற்றம்)