கமல்ஹாசன் பணக்காரரா
இல்லையா? அவர்
நேர்மையானவரா? ஒழுக்கமானவரா?
இந்த கேள்விகள் நம் விவாதத்திற்கு தேவையற்றது. இந்த கேள்வி இப்போது தமிழ் நாட்டில் மட்டுமல்லாது நம் பாரிற் சிறந்த பாரதத்திலும் யாருக்கும் பொருந்தாததை நாம் வழக்கம் போல் ஒத்துக்கொள்ள வேண்டியது இல்லை.
இந்திய துணைக்கண்டத்தில் நடக்கும் கலியுக சமாச்சாரங்களை மக்கள் அவ்வப்போது விவாதித்துக்கொண்டும், மாற்று வழிக்காக ஏங்கிக்கொண்டும், வேறுவழியில்லாமல் பொருத்துக்கொண்டும் இருக்க, கோடிகளை தாண்டிய நம் ஊழல்வாதிகள், தங்களது கட்டுப்பாட்டில் மக்களை வைத்திருப்பதாக நம்பிய சமயம் அவர்களை அசைத்துப் பார்த்தது அவர்களுக்கு சற்றும் தெரியாத தொழில்நுட்பம் - சமூக வலைத்தளங்களின் வாயிலாக.
ரௌடிகளால், அறிக்கைகளால் பணத்தால் ஒன்றும் செய்யமுடியவில்லை. 2G–ல் 2 லட்சம் கோடிகளை தொட்ட அவர்களால் FB-ல் தாங்கள் தாக்கப்படுவதை தடுக்க (ஒடுக்க) முடியவில்லை. வலைத்தளத்தில் அனைவரும் ஒன்றுபடுவது அவர்கள் (நாமும்) எதிர்பாராதது. இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டு, கைது செய்த காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு என அரசாங்கமும், நீதித்துறையும் குழப்பத்தின் உச்சத்தை தொட்டன. இதற்கு முன்னரும் தகவல் தொழில்நுட்ப சட்டம் மூலம் பலர் தண்டிக்கப் பட்டிருந்த செய்தி இதன் மூலம் வெளிவந்தது.
இதன்மூலம் இந்த சமுதாயம் என்ன எதிர்பார்க்கின்றது?. இதுபோன்ற வலைதளங்களில் மட்டும் அல்லாது மற்ற ஏனைய வழிகளிலும் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பவர்கள் அரசியல், மதம், ஆன்மிகம் மற்றும் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட எந்த கருத்தையும் முக்கியமாக இந்தத் துறைகளில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டக்கூடாது என்பதா? எனில், வேறு எதைப் பற்றி பேசுவது? நடிகைகளில் தொ...... பற்றியா? உண்மையில் கண்டிக்கப்படவேண்டியது நடிகைகளானாலும் அவர்கள் இவ்வாறு சித்தரிக்கப்படுவதே ஆகும். அவர்களது தொழில் ரீதியாக அவர்கள் உடுத்தும் ஆடைகளை பிடிக்காதவர்கள் அவர்களை பார்க்கவோ, அவர்களை பற்றி பேசவோ கூடாது. ஒரு தவறான செயலை எதிர்கொள்வதில் முதல் படி அதனை தவிர்ப்பதே ஆகும். இதெல்லாம் தப்பு என்றுவிட்டு ஒளிந்து பார்ப்பது அல்ல.
அப்படியானால் கருத்துச் சுதந்திரம் என்பது?
உபத்ரவம் (அர்த்தம்(?))
இல்லாத கருத்துக்களை கூறுவதா?
பல்வேறு அரசியல் பின்னணியில் ஒரு திரைப்படம் திரையிட அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது. CENSOR BOARD அனுமதித்த பின்னரும், COURT அனுமதித்த பின்னரும். CENSOR BOARD-ல் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக செய்தி வந்துள்ளது. சரிதான்.....
இந்தியாவில் “எதுவும் நடக்கும்”. எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தான். இனி வரும் காலங்களில் ஒருவன் நேர்மையான முறையில், அனுமதி பெற்று, அனைத்து கட்டணங்களையும் TAX-களையும் கட்டி, முறையாக ஒரு BUSINESS செய்தால், அது ஒருவேளை பலம் மிக்க ஒருவருக்கோ அல்லது ஒரு சிலருக்கோ அது பிடிக்கவில்லையெனில், அவன் COURT-க்கு சென்றால் கூட அவனால் பிழைக்க முடியாமல் போய்விடுமா? என்பதுதான்.
யாருங்க அது “இதுலே என்ன சந்தேகம்”னு கேக்கறது?
அனைவருக்கும் பிடிக்கும் வேலையை செய்யவேண்டும் எனில் “தொழில்” தான் செய்ய வேண்டும். வழக்கம் போல் ஆண்கள் பாடு திண்டாட்டம் தான்.
இந்தியாவில் “எதுவும் நடக்கும்”
அனால் உறங்காதீர் ஏனெனில்
“எவர்க்கும் நடக்கும்” நாளை நமக்கும்.
புவன் - யுவனுக்காக
முனுசாமி
(அடுத்து: கடவுளின் உருவம் )
No comments:
Post a Comment