இரட்டையர்களில் ஒருவரை அடித்தால் மற்றொருவருக்கும் அதே இடத்தில் வலிக்கும் என்பது ஒரு திரைப்பட அணு விஞ்ஞானம் அனால் உண்மையில் இருவருக்கும் இடையே சுவாரசியமான சில ஒற்றுமைகளும் சில வேற்றுமைகளும் உள்ளது
மனிதனின் குணாதிசயத்தை தீர்மானிப்பது பிறப்பா அல்லது வளர்ப்பா (Nature or Nurture) என்பது ஒரு மாபெரும் விஞ்ஞான விவாதம். அறிவியலர்கள் இரு பிரிவாக நின்று பிறப்பினாலேன்றும், வளர்பினாலேன்றும் விவாதிட்டனர். இமானுவேல் காண்ட், பிரான்சிஸ் கால்டன், நவம் சாம்ஸ்கி ஆகியோர் பிறப்பிக்கும், ஜான் லாக், பாவ்லாவ், சிக்மண்ட் ப்ராய்டு வளர்பிர்க்கும் வாதிட்டனர். மேலும் குழப்பத்தை அதிகப்படுத்தாமல், ஜீன் பற்றிய விளக்கமான ஆராய்ச்சியை (எனக்கு தெரியாததால்) விட்டுவிட்டு இரட்டைக் குழந்தைகளிடம் நான் கவனித்ததை இங்கு சொல்கிறேன்
வார்த்தைகளின் உச்சரிப்ப்பு - உதாரணமாக சைக்கிள் என்பதை "சீச்சி" என்று எனது இரு குழந்தைகளும் உச்சரிப்பார்கள் இது ஒருவன் சொல்வதை மற்றொருவன் கேட்பதால்தான் என்று சொல்லிவிட முடியாது ஏனெனில் இதே வார்த்தையை மற்றொரு குழந்தை நிச்சயம் வேறுமாதிரிதான் உச்சரிக்கும். இதேபோல் ஏறக்குறைய அனைத்து வார்த்தைகளையும் இருவரும் ஒரே மாதிரி உச்சரிப்பார்கள். சில நேரங்களில் அவர்கள் தங்களுக்குள் நிறைய பேசிக்கொள்வார்கள் எங்களுக்கு புரியாமல் (என்னை அடிப்பதற்கான திட்டமாக கூட இருக்கலாம்)
பழக்கவழக்கங்கள் மற்றும் அசைவுகள் - இருவரும் ஒரே மாதிரி கால்களை மடக்கி அமர்வார்கள் ஒருவரை மற்றொருவர் பார்பதனால் என சொல்ல முடியாது ஏனெனில் அவர்கள் தூங்கும் பொது அருகில் இருக்கும் என்னிடம் தங்கள் முதுகை அணைத்து தூங்குவதே இருவரின் வழக்கம் நிச்சயம் அவர்களது உள்ளுணர்வு ஒரே எண்ணத்துடன் செயல்படுகிறது என இதன் மூலம் நம்பலாம்.
விருப்பங்கள் - குழந்தைகள் அனைவரும் பொதுவாக இனிப்புகளை விரும்பி உண்பார்கள். முதலவனும் அப்படியே அனால் இளையவன் பொதுவாக பழம் மற்றும் வழவழப்பான பொருட்களை தின்பதில்லை. விளையாட காரும், கரடியும் கேட்கின்றனர் மாற்றி வாங்கிகொடுத்தால் வர்மக் கலையை பயன்படுத்துகிறார்கள். விருப்பங்கள் வேறுபடுகின்றன
சிந்தனைகள் - சொல்வதை கேட்க முயலும் மற்றும் கேட்காமல் அடம் பிடிக்கும் வேறுபட்ட வழக்கம் உண்டு. இறுதியல் ஒரே மாதிரி PERFORM-செய்தாலும் இருவரின் செய் முறைகள் பெரிதும் வேறுபடுகின்றன உதாரணமாக படிப்பது, வேலை செய்வது......ஆகியவற்றில் வேறுமாதிரி சிந்திக்கிறார்கள்.
அடிப்பது - வேறு வேறு STYLE- ல் அடித்தாலும் ஒரே அளவு மற்றும் அடிக்கும் நோக்கத்தை கொண்டிருக்கிறார்கள் (யாருங்க அது இதெல்லாம் VALID POINT இல்லைன்னு சொல்றது)
அடிப்படையான சில ஒற்றுமைகள் இருந்தாலும் பின்னாட்களில் வளரும் போது அவர்களது விருப்பம், தேர்தெடுக்கும் பாதை மற்றும் செயல்படும் களம் ஆகியவை இருவரின் அடையாளங்களை வேறுபடுத்தி காட்டுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதென நான் கருதுகிறேன். வேறுபாடுகள் வேலையில், உடையில், உணவில், இருப்பிடத்தில் இருக்கப்போவதில் எனக்கு ஆட்சேபனை எதுவுமில்லை. உள்ளத்தில் மட்டும் வேண்டாம் என்பது என் ஆசை.
பள்ளியில் குழந்தைகளை சேர்பதற்கென என் ஆராய்ச்சியை தொடங்கினேன். அரசு பள்ளியில் படித்ததனால் அரசு பள்ளியில் சேர்ப்பதுதான் சரி என்பது என் எண்ணம். "School - ல சேத்தரதுக்கு எதுக்கு ஆராய்ச்சி" தீப்பெட்டி வாங்குவதற்கே ஆராய்ச்சி செய்யும் மனோ வியாதி எனக்குள்ளதை அறிந்தும் என் மனைவி என்னை சபித்தாள். இன்பமாக சாபத்தை ஏற்று ஆராய்ச்சியை துவங்கினேன். அரசு பள்ளிகளிலும், தனியார் Matriculation பள்ளிகளிலும் சமச்சீர், CBSE, ICSE, IGCSE, IB, Montessori என பல்வேறு பாடத்திட்டங்கள், ஒவ்வொன்றுக்கும் அதனுடைய நன்மை, தீமைகள், அனைத்தையும் பட்டியலிட இந்த முறை வெள்ளை நிற உடையில் வந்து என் மனசாட்சி என்னை ஏகமாய் திட்டியது.
ஆசிரியர் ஒருவருடன் பேசும்போது, அவர் இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் அறிவுடன் விளங்குவது, அங்கு நல்ல முறையில் பாடம் நடத்தப்படுவதால் அல்ல என்றும், அங்குள்ள மாணவர்கள் தாங்களாகவே படிக்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்வதனாலேயே என்றும் கூறினார். ஆம் பாடம் நல்ல முறையில் கற்பிக்கப்படுவதைவிட, மாணவர்கள் தாங்களாகவே கற்றுக்கொள்ளும் அறிவை பெற்றால் அது மேன்மையானதாக இருக்கும். இன்று உள்ள பல தனியார் கல்வி நிறுவனங்கள் சிறந்த முறையில் கற்பிக்கின்றன அனால் தானாக கற்றுக்கொள்ளும் அறிவை அத்தகைய மாணவர்கள் இழக்கிறார்கள். பின்னாட்களில் சுயமாக எதையும் கற்க சிரமப்படுகிறார்கள். எதையும் சுயமாகவும், தாய்மொழியிலும் கற்பதே அழமாகவும், அர்த்தமுள்ளதாகவும் அமையும்.
சுயமாக சிந்திக்கும் அறிவே, கொசு அடிப்பதில் ஆரம்பித்து, ஓட்டை விழுந்த ஒசோனை சரிசெய்வதுவரை நம்மை தேவையானவாறு செயல்படவைக்கும். அறிவியல் முன்னேறியே இந்த காலத்தில் அதை பயன்படுத்தி எந்தவிதமான தீங்கும் விளைவிக்காத கண்டுபிடிப்புகளை நிகழ்த்த நாம் தடுமாற, இந்த வசதிகள் எதுவும் இல்லாத பழங்காலத்தில் அறிய கண்டுபிடிப்புகளை நம் முன்னோர்கள் நிகழ்த்தியது இதனால்தான். கல்வி என்பது இதுதானென்று விவேகானந்தரும் விவரிக்கிறார்.
பள்ளி பற்றிய என் ஆராய்ச்சி இன்னும் முழுமை அடையவில்லை.........(ஆராய்ச்சி முடியறதுக்குள்ள பையன் பெருசாயிட்டா என்ன பண்றது?)
எனக்கு மங்கலாக ஞாபகம் இருக்கிறது, எனது சிறு வயதில், 90-ஐ தாண்டிய என் பாட்டி தினமும் குறைந்தது 10 முறையாவது "எல்லாம் கலி காலம் கலி காலம்" என்பார். நியூட்டன் நேரில் வந்து சொன்னாதான் நம்புவேன் என்று அடம்பிடிப்பேன். அனால் இப்போது, குடிக்க மோர் தந்த நாட்டில் போலியாக சுத்திகரிக்கப்பட்ட கட்டண நீர், ஆன்மிகம் அருள வேண்டிய தமிழ் ஆதீனம் கன்னடத்தில் சட்டப்படி ஜாமீன் கோருகிறார் பால் வழக்கிற்கு அல்ல பாலியல் வழக்கிற்கு, 5-ஆம் வகுப்பு படிப்பதற்கு கல்விக்கட்டணம் செலுத்தமுடியாமல் படிப்பை பாதியில் கைவிடும் மாணவன், அவன் பார்க்கும் கிரிக்கெட்-ஐ
ஆடும் கிரிக்கெட் வீரரும், அவரை விலைக்கு வாங்கிய நடிகரும் சில ஆயிரம் கோடிகளை சம்பாதித்தவுடன், அந்த 5-ஆம் வகுப்பு கூட படிக்காத அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டமும், பாரத ரத்னா பரிந்துரையும், இது போதாதென்று சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கணக்கில் உள்ள அனைத்து பணமும் கருப்பு பணம் என்று கூறி விட முடியாது என மத்திய நிதியமைச்சர், இனிமேல் ஜனநாயக தேர்தல் என்பதை சொந்த செலவில் சூனியம் என மாற்றிக்கொள்ளலாம். "எல்லாம் கலி காலம் கலி காலம்"
புவன் - யுவனுக்காக
முனுசாமி
(அடுத்து: வாழ்க்கை #1 \ 22-06-2012)
தங்களின் கருத்துக்களை Comments-ல் இடவும். (கேள்விகள் வரவேற்கப்படுகின்றன)